வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (18:45 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்  8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர்.
 
ஸ்கோர் விபரம்:
 
ஸ்டோக்ஸ்: 89 ரன்கள்
மோர்கன்: 57 ரன்கள்
ஜேஜே ராய்: 54 ரன்கள்
ரூட்: 51 ரன்கள்
 
தென்னாப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுக்களையும் இம்ரான் தாஹிர், ரடபா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ஃபெலுக்வாயோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் 312 என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்யவுள்ளது