1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (14:52 IST)

ஜய வருட ராசி பலன்கள் - மகரம்

மனசாட்சி ஒதுக்கும் செயல்களை மந்திரியே சொன்னாலும் செய்ய மறுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். 
 
உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சுக்கிரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் தடைப்பட்டு தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பூர்வீகச் சொத்தின் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். படித்துப் பட்டம் வாங்கியும் உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப உத்தியோகம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். 
 
ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, ஜூன் 12 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வீண் பழிகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குரு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கூடிவரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் நீங்கும். இருவரும் மனம் விட்டுப் பேசி செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
 

ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். அவருக்கு வீண் டென்ஷன், ரத்த அழுத்தம் வந்துபோகும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் கேது 3ம் வீட்டில் அமர்வதால் தடைகள், எதிர்ப்புகளெல்லாம் குறையும். வீரியத்தை விட காரியம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள். இளைய சகோதர வகையில் ஆதரவு கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். 
 
ஜூன் 20ந் தேதி வரை ராகு 10ல் நிற்பதால் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். அதற்காக கவலைப்பட வேண்டாம். உத்தியோகத்தில் பிடிப்பற்றபோக்கு நிலவும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வந்து போகும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். ஜூன் 21ந் தேதி முதல் ராகு 9ம் வீட்டில் நுழைவதால் அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். 
தந்தையாருக்கு நெஞ்சுவலி, சோர்வு, களைப்பு வந்துபோகும். அவருடன் மனத்தாங்கல் வரும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள்.     
 
டிசம்பர் 15 வரை உங்கள் ராசிநாதனான சனிபகவான் 10ம் வீட்டிலேயே நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெற்றிகள், பாராட்டுகளை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். முக்கியப் பதவியில் இருக்கும் பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமொழி பேசுபவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். வேலைச்சுமை அதிகரிக்கும். டிசம்பர் 16 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். 
வியாபாரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் லாபம் அதிகரிக்கும். தரமான சரக்குகளை மொத்த விலைக்கு வாங்குவீர்கள். 
 
புது நண்பர்களின் உதவியால் முன்னேறுவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழும் கூடும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். இரும்பு, மூலிகை, கன்ஸ்ட்ரக்ஷன், அழகு சாதனப் பொருட்கள், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். 
 
உத்தியோகத்தில் சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். புது வாய்ப்புகள் தேடிவரும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். 
 

சக ஊழியர்கள் உங்களின் புதுத் திட்டங்களை வரவேற்பார்கள். என்றாலும் டிசம்பர் 15 வரை சனி உத்தியோக ஸ்தானத்தில் நிற்பதால் அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய வேண்டாம். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சம் வரும். எனவே, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும். 
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். பழைய நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும். 
 
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் நிறைவேறும். படிப்பில் மதிப்பெண் கூடும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். ஆசிரியர் உறுதுணையாக இருப்பார்கள். பள்ளிக் கல்வியை தவிர்த்து மற்ற மொழியறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  
 
கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வாழ்க்கைத்துணையும் அமையும். பெற்றோரின் பேரன்பில் மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. 
 
இந்த ஜய வருடம் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாகவும், சமூகத்தில் அந்தஸ்தையும் வழங்கிச் செல்லும்.
 
பரிகாரம் :  திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை நெய் தீபமேற்றி வணங்குங்கள். வயதானவர்களுக்கு காலணியும், குடையும் வாங்கிக் கொடுங்கள்.