வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (15:18 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - தனுசு

மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! ங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் இனி புரிந்துக் கொள்வீர்கள். ஏமாந்தது, இழந்ததெல்லாம் போதும் என்ற முடிவுக்கு வருவீர்கள். எங்குச் சென்றாலும் உங்களுக்கு செல்வாக்குக் கூடும். உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுகள் குறையும்.
 
ஆனால் ஏழரைச் சனி உங்களுக்கு தொடங்கியிருப்பதால் பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக நடந்துக் கொள்வது நல்லது. பழைய கடனை நினைத்து தூக்கம் குறையும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்கள் முன்னிலையில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நீங்கள் பழைய வாகனத்தை விற்றிருந்தால் அதில் உங்கள் பெயர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய வாகனத்தை விற்கும் போது முழுமையாக வாங்குவோரின் பெயருக்கு மாற்றிவிடுங்கள். டிரைவிங் லைசன்சை புதுப்பிக்க தவறாதீர்கள். இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்கள் இடத்தை சென்று கண்காணித்து வருவது நல்லது. உங்கள் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது.     
 
07.01.2016 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேது தொடர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சின்ன சின்ன காரியங்களைக் கூட ஒரே முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளும் தலைத்தூக்கும். ஆனால் அவற்றிற்கு நல்லத் தீர்வும் கிடைக்கும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

08.01.2016 முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் சுமூகமாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தைரியம் பிறக்கும். ஆனால் இளைய சகோதர வகையில் சின்ன சின்ன செலவுகளும், அலைச்சலும் இருக்கும். 
 
07.01.2016 வரை ராசிக்கு 10-ம் வீட்டில் ராகு நிற்பதால் உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு, இடமாற்றங்கள், உங்களைப் பற்றிய வதந்திகள், வீண் பழிகள் வந்துச் செல்லும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். ஆனால் 08.01.2016 முதல் ராகு 9-ம் இடத்தில் நுழைவதால் வேலைச்சுமை குறையும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
 
உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். என்றாலும் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். தந்தையார் ஏதேனும் அறிவுரைக் கூறினால் அமைதியாக ஏற்றுக் கொள்வீர்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் பதில் பேசி அவர் மனதை புண்படுத்தி விட்டு பிறகு கலங்கிக் கொண்டிருக்க வேண்டாம். பாகப்பிரிவினை, பிதுர் ராஜ்ய சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. கோர்ட், கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். கௌரவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.  
 
உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அவருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
 
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பாகப்பிரிவினைகளும் நல்ல விதத்தில் முடியும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். குலதெய்வக் கோவிலை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும். ஆனால் சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கும்.
 
4.07.2015 வரை உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலும், செலவினங்களும் அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும். மனஇறுக்கங்கள் வந்துப் போகும். ஓடிஓடி உழைத்தாலும் ஒன்று ஒட்டவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் இருக்கும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். நெருங்கியப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு உங்களை விட்டு விலகுவார்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஆனால் 5.07.2015 முதல் குருபகவான் உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் நல்லது நடக்கும். நிம்மதி உண்டாகும். அலைச்சல் குறையும். பணவரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தந்தையாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
 
அழகு, ஆரோக்யம் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பால் சமூக அந்தஸ்து ஒருபடி உயரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் எடுத்து நடத்துவீர்கள். 
 
வியாபாரத்தில் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு லாபம் அதிகமாகும். உங்கள் ராசிநாதனாகிய குரு பகவான் 5.7.2015 முதல் 9ல் அமர்வதால் வியாபாரத்தை விரிவுப்படுத்த கடனுதவி கிடைக்கும். வைகாசி, ஆவணி, புரட்டாசி மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
 
நல்லவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். வேலையாட்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். வியாபாரத்தை விரிவுப்படுத்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். என்றாலும் 07.01.2016 வரை ராகு 10-ம் வீட்டிலேயே நிற்பதால் இழப்புகள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள் வந்துப் போகும். 
 
உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். வைகாசி ஆவணி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும். தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவீர்கள். புரட்டாசி மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். Êசக ஊழியர்களும் மதிப்பார்கள் 07.01.2016 வரை ராகு 10-ம் இடத்திலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருக்கும். ஆனால் ஜீலை மாதம் முதல் குரு 9-ம் வீட்டில் நுழைவதால் சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலும் வேலைக் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண்ணும் உயரும். சக மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பீர்கள்.       
 
கன்னிப் பெண்களே! உங்களுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த சோர்வு, களைப்பு, அலர்ஜி, இன்பெக்ஷன் நீங்கும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் தடைப்பட்டிருந்த உயர்கல்வியை தொடரும் வாய்ப்பும் கிடைக்கும்.
 
இந்த புத்தாண்டு தடுமாற்றம், தயக்கத்திலிருந்து விடுவிப்பதுடன் தள்ளிப்போன விஷயங்கள் முடிவடைந்து பலவற்றிலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.