வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (21:01 IST)

முழு திருப்தி: 10 தொகுதிகள் பெற்றபின் காங்கிரஸ் பிரமுகர் பேட்டி

திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக 10 தொகுதிகளை காங்கிரஸ் பெற்று இடம்பெற்றுவிட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
கலைஞர் காலம் முதல் இன்றுவரை தி.மு.க- காங்கிரஸ் இடையே நல்ல உறவு தொடர்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் திருப்தி அளிக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். தமிழகத்தில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்
 
நாடு முழுவதும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெரும்.