1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (21:56 IST)

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி உள்ளது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. 
 
இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின் 7 வருடம் கழித்து தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இனிமேல் ஆண்டு தோறும் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
 
பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இவ்வாறு இருக்கையில் பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகதான் காரணம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு...
 
திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறொரு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதால், இதுவரை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்படாமல் வைத்த நிலுவை தொகையை, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவே இந்த பேருந்துக் கட்டண உயர்வைக் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.