1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (11:57 IST)

நீதிமன்றத்திற்கு செல்வோம் - வெற்றிவேல் எம்.எல்.ஏ

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார் என வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைம்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன் தரப்பு வெற்றிவேல் எம்.எல்.ஏ “ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். கொறடாவின்  உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். இந்த நடவடிக்கை எதிராக நீதிமன்றம் செல்வோம்” என அவர் பேசினார்.