வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (14:48 IST)

பிச்சை போடாததால் வாலிபரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த திருநங்கைகள்

வாலிபரிடம் பிச்சை கேட்டு கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் தாட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (32). இவரது நண்பர் தரம்வீரப்பா (20) உள்பட 5 பேர் கட்டிட வேலைக்காக ரயிலில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. ரயிலில் ஏறிய திருநங்கைகள் பயணிகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.  சத்தியநாராயணா, தரம்வீரப்பா ஆகிய 2 பேரும் திருநங்கைகளுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
 
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த திருநங்கைகள் சத்தியநாராயணாவை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். அவரைக் காப்பாற்ற தரம்வீரப்பா ரயிலில் இருந்து குதித்தார். படுகாயமடைந்த இருவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சத்தியநாராயணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தரம்வீரப்பா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிச்சை போடாததால், வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.