ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (08:42 IST)

இன்று மாவட்டங்களாக உதயமாகிறது ராணிப்பேட்டை, திருப்பத்தூர்

தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக உதயமாகின்றன ராணிப்பேட்டையும் திருப்பத்தூரும்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன. இதில் முன்னதாக தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி தனி மாவட்டங்களாக உதயமான நிலையில் இன்று வேலூரிலிருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவை தனி மாவட்டங்களாக உதயமாகின்றன.

தமிழகத்தின் 35 ஆவது மாவட்டமான திருப்பத்தூரிலும், 36 ஆவது மாவட்டமான ராணிப்பேட்டையிலும் இன்று நிர்வாக பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.