1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (10:09 IST)

காதல் மனைவியை கத்தியால் குத்திய இளைஞர் ! பகீர் சம்பவம்

சென்னை கேகே நகரை அடுத்த செசப்பாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை வசித்து வந்தவர் அருண்குமார் (24). இவர் எலட்ரீசனாக பணியாற்றி வந்தார்.இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆன பிறகும் தனது வீட்டிலேயே  குடியிருக்க சந்தியா விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. இதை அருண்குமாரும் ஒப்புக்கொண்டார். 
 
ஆனால் நாளாக ஆக இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து தகராறும் வெடித்தது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் தனி வீடு பார்த்து சந்தியாவை அங்கே அழைத்துச் செல்ல அருண்குமார் விரும்பியுள்ளார். இதற்கு சந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் வீட்டில் இருவருக்கும் நேற்று தகராறு எழுந்தது. 

இதனால் கோபம் அடைந்த அருண்குமார், சமையல் அறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து சந்தியாவை சரமாரியாக குத்தினார்.  இதை தடுக்க வந்த மாமியார் சரிதாவையும் கத்தியால்  குத்தினார். இருவரின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர், அருண்குமார் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.
 
இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சந்தியா வழியிலேயே உயிரிழந்துவிட்டார். சரிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இதுசம்பந்தமாக எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய அருண்குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.