ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (13:35 IST)

வருகிறது இடியுடன் கூடிய கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், சேலம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.