வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (12:18 IST)

தியேட்டர் திறக்க நாங்க ரெடிதான்.. ஆனா..? – இழுத்தடிக்கும் கடம்பூரார்!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரை துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடமிருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ குழுவின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.