செவ்வாய், 9 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (11:19 IST)

பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கு முடித்து வைப்பு..!

பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கில் எஸ் வி சேகர் மன்னிப்பு கேட்டதை எடுத்து அந்த வழக்கு முடித்து விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது  

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து நடிகர் எஸ்வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்திருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை அடுத்து  எம்பி எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் எஸ்வி சேகர் மன்னிப்பு கோரிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து  இந்த மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து எஸ் வி சேகர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Edited by Siva