1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 மார்ச் 2018 (12:48 IST)

முடிந்தால் பெரியார் சிலை மீது கைவைத்து பார்! சுப.வீரபாண்டியன் சவால்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில், இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை' என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
 
எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், எச்.ராஜாவுக்கு நேரடி சவால் ஒன்றை விடுத்துள்ளார்,.
 
நாளை என்ன நாளை, வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை எச்.ராஜா ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்