1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 மார்ச் 2018 (18:33 IST)

சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகன்

புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை அவரது மகனே வெட்டிய  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி(54).  இவரது மகன் ஆனந்த்(30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. 
 
இன்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியின் தலையை துண்டித்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
 
இதனையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிந்த போலீஸார் அவரை கைது செய்தனர். சொத்துக்காக பெற்ற மகனே தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.