வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (11:54 IST)

”ஜெயலலிதாவும் 40 திருடர்களும்”.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்

ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் குறித்தும், சர்ச்சையாக பேசியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்ககூடியதாக பேசுதல், வன்முறையை தூண்டும்  வகையில் பேசுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க சீமானை நேரில் ஆஜராகும்படி, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக தூத்துக்குடி வந்த சீமான், நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ”அலிபாபாவும் 40 திருடர்களும் போல, அம்மாவும் 40 திருடர்களும் என்பது போல் தமிழக அமைச்சர்கள் உள்ளனர்” என அதிமுக அமைச்சர்கள் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும். “தற்போது அம்மா இல்லை, 40 திருடர்கள் மட்டுமே உள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

எப்போதும் தமிழக அமைச்சர்களை குறித்து விமர்சித்து வரும் சீமான், தற்போது அவர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.