வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (10:23 IST)

எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் : முடிவிற்கு வந்த கண்ணா மூச்சு ஆட்டம்

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளார்.

 
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. 
 
60 நாட்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருக்கிறார்.  போலீசாருடன் அவர் பாதுகாப்பாக காரில் செல்லும் புகைப்படங்களும், அமைச்சர் குடும்ப விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
அந்நிலையில்,  ஜூன் 20ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், வரும் ஜூலை 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நெல்லை நீதிமன்றமும் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனவே, அவர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராவாரா அல்லது டிமிக்கி கொடுப்பாரா என்கிற சந்தேகம் எழுந்தது. 
 
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் காரில் வந்தார். அதன் பின் அவர் நீதிமன்றத்திலும் ஆஜரானார். இதையடுத்து, 60 நாட்களுக்கும் மேலாக எஸ்.வி.சேகர் நடத்திய கண்ணா மூச்சு ஆட்டம் முடிவிற்கு வந்துள்ளது.