1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ration card application increase

அதிகரித்த ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள் ... முடங்கியது இணையதளம்

ரேஷன் கார்ட்கள்
ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால் பொது விநியோக திட்ட இணையதளம் கடந்த சில நாள்களாக முடக்கியிருக்கிறது. 

 
நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இப்போது இந்த புதிய திட்ட அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒன்றாக இருந்த கார்ட்களையும் பிரித்து தனித்தனி கார்ட்களாக பிரிக்கும் விண்ணப்பங்களும் அதிகமாகியுள்ளதாம்.
 
இதனால்  பொது விநியோக திட்ட இணையதளம் மிகவும் பிஸியாக இருந்தது. இந்நிலையில் பொது விநியோக திட்ட இணையதளம் கடந்த சில நாள்களாக முடக்கியிருக்கிறது. அதில் எந்தவொரு சேவையையும் பெற முடியாத சூழல் நிலவுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆகஸ்ட் 1 முதலே கல்லூரிகள் திறப்பு??