செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (05:00 IST)

ஜெயித்த பின்னர் அடாவடியை ஆரம்பித்த தினகரன் ஆதரவாளர்கள்: ஆர்.கே.நகர் மக்கள் அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் கடைசி நாள் பிரச்சாரத்தின்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி அதிகமாக இருந்ததால் ஒருசில வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் கொடுத்துவிட்டு, அந்த டோக்கனுக்கு தேர்தல் முடிந்தவுடன் பணம் தருவதாக தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது

இந்த நிலையில் தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்ட நிலையில் சொன்னபடி சிலருக்கு ரூ.20 டோக்கனுக்கு பணம் தரவில்லையாம். டோக்கனை கொடுத்து பணம் கேட்டவர்களை தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி  ஆர்.கே.நகர் தொகுதி மீனாம்பாள் நகர் பகுதியில் உள்ள தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டர் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு வந்து 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பணம் கேட்ட மூன்று பேர்களை தாக்கியதாகவும்  கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், தினகரன் ஆதரவாளர்கள் ஜான்பீட்டர் உள்பட நான்கு பேர்களை கைது செய்துள்ளனர். தினகரன் ஆதரவாளர்கள் வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதி அளித்த பணத்தை தராததால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.