1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (17:04 IST)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 சிறப்புக் குழுவை நியமித்து அரசானை வெளியீடு!

சீனாவில் இருந்து பல்வேறு  உலகநாடுகளில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் எனவும், இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகிறது. தற்போதுவரை இந்தியாவில் 7600 மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,  நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்,  கொரொனாவால 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,.இதில், 44 பேர் குணமடைந்துள்ளனர்.8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில், ஊரடங்கு மற்றும் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர், ஏடிஜிபிக்கள் பங்கேற்றுள்ளனர்.