1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (10:03 IST)

நிலுவையில் இருக்கும் திருமண உதவித் திட்டம்… விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு!

மகளிருக்கான திருமண உதவித்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலையில் விரைவில் அந்த திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கான திருமணத்துக்காக 8 கிராம் தங்கமும் 25000 ரூபாய் முதல் 50000 ரூபாய் பணமும் திருமண உதவித் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகள் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என மகளிர் உரிமைகள் துறை அமைச்சா் கீதா ஜீவன் என நேற்று அறிவித்துள்ளார்.  அவர் பேசியபோது ‘கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான கருத்துகள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.