பிரபல குளிர்பான பாட்டிலில் பல்லி : அதிர்ச்சி தகவல்
தர்மபுரியில் விற்பனை செய்யப்பட்ட பிரபல குளிர்பான பாட்டிலில் பல்லி இருந்ததால், வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக உடனடியாக அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில், அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள் பல்லி கிடந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்த மற்ற நிறுவன குளிர்பான பாட்டில்களையும் அவர் சோதனை நடத்தினர். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், முழுமையான ஆய்வுக்குப் பின் அந்த குறிப்பிட்ட குளிர்பான நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.