ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (19:55 IST)

பேரறிவாளன் ஜாமின் குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!

முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்ஃப் பேரறிவாளன் என்பதும் அவருக்கு கடந்த சில மாதங்களாக தமிழக அரசு பரோல் வழங்கி வந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் 
 
ஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் திறமையான வாதத்தால் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் பேரறிவாளனுக்கு இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பதாவது:
 
உச்ச நீதிமன்றம் என்ன கருத்தை தெரிவிக்கிறதோ, அதையே ஏற்றுக் கொள்கிறோம்; ஜாமின் வழங்கியது தொடர்பான தீர்ப்பை ஏற்று கொள்கிறோம்.