ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:20 IST)

எண்ணி 6 மாசம், அப்புறம் தலைவர் ஆட்சிதான்: ரஜினிக்கு ஹைப் ஏத்தும் கராத்தே!

இன்னும் ஆறு மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என்றும், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று ரஜினி முதல்வர் ஆவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை கடந்த 2017 ஆம் உறுதி செய்தார். அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனது அரசியல் நிலைபாடு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார். 
 
இந்த அமைதியின் காரணமாக, அவரது அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை, அரசியலுக்கு வரப்போவது உறுதி. எல்லாம் தயார் நிலையில் உள்ளது. அம்பு எய்ய வேண்டியது மட்டுமே பாக்கி என கூறி அடைத்துவிட்டார் ரஜினி. 
வெளியில் அமைதியாக காணப்பட்டாலும் உள்ளுக்குள் நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, ரஜினி தயாராகி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டகராத்தே தியாகராஜன் ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, இன்னும் எண்ணி 6 மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி. 2021 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரஜினிகாந்த் முதல்வர் ஆவார் என தெரிவித்துள்ளார்.