1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (08:58 IST)

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது! – மக்கள் உற்சாகம்!

கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தை பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய மாடுபிடி போட்டியான ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலம் வாய்ந்தது. இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது. 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.