வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:40 IST)

கமலாலயம் சென்றால் குற்றவாளிகளைப் பிடிக்கலாம் - மகிளா காங்கிரஸ் தலைவர்

பிஜேபிடமிருந்து பெண்களைப் பாதுக்காப்பதுதான்  முதல் கடமையாகும் என  மகிளா காங்கிரஸ் மூத்த தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு நேற்று முந்தினம் நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த விமர்சனங்கள் மத்தியில் ஆளும் பாஜக மீது விழுந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினத்தில் கலந்து கொண்ட மூத்த  தலைவர் சுதா ராமகிருஷ்ணன், பிஜேபியிடம் இருந்து பெண்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை எனவும், வரும் தேர்தலில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு பெற்றுத்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்