திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (18:15 IST)

கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய ஆளுனர் தமிழிசை: வைரல் புகைப்படம்!

கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய ஆளுனர் தமிழிசை: வைரல் புகைப்படம்!
புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கல்லூரி வளாகத்தில் ஊஞ்சலாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக கடந்த சில வருடங்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கூடுதலாக புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆகவும் அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
புதுச்சேரியில் அவர் ஆளுநராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும், குறிப்பாக புதுவை சட்டமன்றத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக ஆளுநர் ஒருவர் தமிழில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் சென்றார். அங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா விதிமுறைகளைக் கடைபிடித்தார்களா? என்பதை ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை அதன் பின் அங்கிருந்த ஊஞ்சல் ஒன்றில் ஜாலியாக ஆடினார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.