செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (16:49 IST)

முறிந்து போன காதல் திருமணம் : தூக்கிட்ட மனைவி ..காணாமல் போன கணவர்!

திருவாரூர் மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள ருச்சிபாளையம் கிராமத்தில் வசித்துவந்தவர் சிவக்குமார். இவரது மனைவி குணசுந்தரி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இரு வீட்டுப் பெற்றோரையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டதால் தனியாக வசித்துவந்தனர்.
 
இந்நிலையில் திருமணம் ஆன நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தற்போது, குணசுந்தரியின் மரணத்திற்குப் பின்னர் அவரது கணவர் சிவக்குமாரை காணாததால் போலிஸார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.