செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (14:18 IST)

கொடநாடு விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது - டிடிவி தினகரன்

கொடநாடு விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற திடிர் மரணத்திற்கு யார் யார் மூலதனமாக செயல்பட்டார்கள் என்பது குறித்த ஆவணங்களை வெளியிட்டார்.அப்போது மேத்யூஸ் தமிழக முதல்வர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
இது குறித்து தினகரன் கூறியதாவது:
 
கொடநாடு விவகாரத்தில் பழனிச்சாமியின் செயலைப் பார்க்கும் போது அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என குற்றம் சுமத்தியவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்திகிறது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இவர்களை சிறைக்கு அனுப்பவில்லை. கூடிய விரைவில் இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும். அதற்கான காலம் கூடிய சீக்கிரம் வரும் . இவ்வாறு தெரிவித்தார்.