1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:04 IST)

திமுகவிடம் பணம் இல்லையாம்: சொல்கிறார் ஆற்காடு வீராசாமி

இந்தியாவின் பணக்கார கட்சிகளில் ஒன்று திமுக என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்களிடம் ரூ.100 கோடி பணம் இல்லை என்றும், இந்த பணம் மட்டும் தங்களிடம் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை எப்பவோ கவிழ்த்திருப்போம் என்றும் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்,.

மக்களின் விரோத அரசு அதிமுக அரசு என்று கூறும் திமுக, அந்த அரசை ஏன் கவிழ்க்க முயற்சி செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஆற்காடு வீராசாமி, 'அதிமுகவிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நாங்கள் நினைத்திருந்தால் இந்த ஆட்சி எப்படி நீடிக்க முடியும். எங்களுக்கு பண வசதி இருந்தால் அதனை செய்து காட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை.

பணம் கொடுத்து ஒரு ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமாக இருந்தாலும் கூட, அரசியலில் இது சகஜம். ஆட்சியை கவிழ்ப்பது என்பது எதிர்க்கட்சிக்கு ஏற்படுகின்ற வாய்ப்பு. தற்போதையை அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் கிடையாது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள் எங்களை எங்கள் பக்கம் இழுத்தாலே போதும் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆனால் அதற்கு எங்கள் கட்சியில் பணம் இல்லை' என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.