வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (20:19 IST)

தீபாவளி நெருங்கிய நிலையிலும் வெறிச்சோடி கிடக்கும் ஜவுளிக்கடைகள்! ஆன்லைன் வியாபாரம் காரணமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருவார்கள். குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் மக்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் ரங்கநாதன் தெரு உள்பட சென்னை நகரின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது 
 
இதற்கு முக்கிய காரணமாக ஆன்லைனில் கோடிக்கணக்கான வியாபாரம் நடப்பதையே வியாபாரிகள் காரணமாக கூறுகின்றனர். தீபாவளி பண்டிகையின் சிறப்பு தள்ளுபடி சேல்ஸ் என பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் ஏற்கனவே கோடிக்கணக்கில் வியாபாரத்தை முடித்து விட்டன. இதனால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களால் தொழிலாளர்களுக்கு வேலை சரியாக கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை படுமந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் தீபாவளி நெருங்கும் ஓரிரு நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் காத்திருக்கின்றனர். வியாபாரிகளின் நம்பிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்