1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (14:45 IST)

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Mk Stalin
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் 
 
இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க என்று தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மீன்பிடி தடைக்காலத்திற்குப் பின்னர் மீன்பிடிக்கச் சென்றவர் கைது செய்யப்பட்டது மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
இந்த கடிதத்திற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது