1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (08:55 IST)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மெகா பிரைஸ் வழங்கும் எடப்பாடியார் அண்ட் கோ!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கும் சிறந்த காளையருக்கும் பரிசாக கார் வழங்கப்படும் என முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சற்றுநேரத்திற்கு முன்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில்  1,400 காளைகளும், 800க்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்றுள்ளனர். நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையருக்கு ஒரு கார் பரிசளிப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேபோல் சிறந்த காளைக்கு ஒரு கார் பரிசளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.