1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (10:53 IST)

தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கணேசன்

lighters
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் அறிவித்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரிய கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதனால் தீப்பற்றி உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran