1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:09 IST)

தினகரன் மீதான தேசத்துரோக வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு சிம்மசொப்பனாக இருந்து எந்த நேரத்திலும் ஆட்சியை டிடிவி தினகரன் கவிழ்க்கலாம் என்ற நிலையில் அவரை முடக்கி வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. எனவே தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தடை செய்யுமாறு தினகரன் தரப்பில் இருந்து அவரது ஆதரவாளரான புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் தினகரன் மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.