1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (10:03 IST)

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி யாருக்கு? : களை கட்டும் பெட்டிங்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சேலம் மாவட்டத்தில் வெள்ளி கட்டிகளை வைத்து பெட்டிங் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.

 
ஆர்.கே நகரில் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.  இதனையடுத்து, இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என சேலத்தில் பெட்டிங் சூடுபிடித்துள்ளது. சேலத்தில் வெள்ளி தொழில் அதிகமாக நடப்பதால் தொழிலாளர்கள் 100 முதல் 500 கிராம் வரையும், பட்டறை உரிமையாளர்கள் கிலோக்கணக்கிலும் பந்தயம் கட்டுவதாக கூறப்படுகிறது.
 
கடந்த பொதுத்தேர்தல் வரை திமுகவினரும் பெட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பதால் இந்த முறை அவர்கள் பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்களை இழுக்கும் பொருட்டு இரு மடங்கு வெள்ளி கட்டிகள் மற்றும் இரு மடங்கு தொகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.