1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (13:45 IST)

சிறுமியைக் கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் – போக்ஸோ சட்டத்தில் கைது !

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவரை 60 வயது முதியவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகேயுள்ள அனக்காவூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமி அரசுப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துள்ளார். அனக்காவூர் பகுதிக்கு அருகேயுள்ள திருவத்திரம் எனும் ஊரைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற நடராஜன் எனும் முதியவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் நெருங்கி பழகிய நடராஜன் அவரோடு உடலுறவுக் கொண்டுள்ளார். ஒருக்கட்டத்தில் மாணவி கர்ப்பமானதும் பயந்து தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்க நடராஜன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.