1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:40 IST)

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. முடிவுக்கு வராத பிரச்சனையால் அவதி..!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வராமல் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. 
 
இலங்கை திரிகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர்களை இலங்கை கடற்படைகைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva