வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் வழிகள்..!

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு பெருகி விட்டனர். கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து, கண்களை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம். 
தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் சந்திக்கும், முதல் பிரச்சனைகள் ஏராளம். அதில் முக்கியமாக பார்வைக் கோளாறு, தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும்போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண்  உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்னைகளை உறுதிப்படுத்தும்.
 
இந்த பிரச்னைகளுக்கு, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கம்ப்யூட்டர் பயன்படுத்தும், 80 சதவீதம் பேருக்கு இந்த, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ வர வாய்ப்பு உள்ளது. சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. 
 
கம்ப்யூட்டரை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கிற மாதிரி, அமைத்துக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் இருக்கும் அறையில்,  வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், "பளீர்’ என்ற வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும்.
 
தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதோடு, கண்களை மூடி, வட்டச்  சுழற்சி முறையில், ஒரு முறை சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின், கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும்.