வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (06:30 IST)

தோல் நோயில் இருந்து விடுபட எளிய வழிமுறைகள்

தோல் நோய்களில் இருந்து விடுபட தோல் டாக்டர்களை பலர் அணுகி வரும் நிலையில் எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே அதற்கு நிவாரணம் காணலாம். அது எப்படி என்று தற்போது பார்ப்போம்



 
 
மருதாணி: கால் இடுக்குகளில் வரும் சேற்றுப்புண்ணுக்கு சரியான மருந்தாக மருதாணி செயல்படுகிறது. மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் வந்த இடத்தில் பூசினால் விரைவில் குணமாகலாம்
 
தேமல் வந்தவர்கள் நாயுருவி இலையுடன் காதிக்காய் சேர்த்து நன்றாக அரைத்து தோல்மீது பூசி வந்தால் தேமல் நோய்கள் குணமாகும்
 
பலருக்கு கண்களின் கீழே கருவளையம் தென்படும். இதற்கு தக்காளியை தினமும் அரைத்து கருவளையம் உள்ள இடத்தில் பூசினால் கருவளையம் மறைந்துவிடும்
 
தோல் அரிப்பு, சிறு கொப்புளம் உள்ளவர்கள் மருதாணிக்கொழுந்து, பூண்டு, மிளகு மற்றும் மஞ்சள் தூள் கலந்து நீரில் கொதிக்கவிட்டு தினமும் 50மிலி அளவு குடித்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்