1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜூன் 2018 (17:10 IST)

தேர்வு எழுத வந்த மாணவிகள் கர்ப்பமா என சோதனை!

போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்பவர்களுக்கான தகுதி விபரம் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் உயரம் குறித்த அற்விப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால், தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். 
 
விடுதலை செய்யப்பட்ட பெண்கள் போலீஸார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது, மூன்று மணி நேரம் வேனில் பயணித்தோம்,  செல்போன்களை பறித்துக்கொண்டு பெற்றோரிடம் பேச அனுமதிக்கவில்லை. 
 
சிறைக்கு சென்றதும், தனியறையில் வைத்து சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர்.