வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (16:49 IST)

சிறையுள்ள கணவரை விடுவிக்க உதவுவதாக கூறி கற்பழித்த நண்பர்கள்

சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
மகாராஷ்டிரா பல்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் போலீஸில் கற்பழிப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில்,
 
தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க உதவுகிறோம் என்று கூறி எனது கணவரின் நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தனர். இந்த இரண்டு கற்பழித்துவிட்டு என்னை மிரட்டிவிட்டு சென்றனர். 
 
இவ்வாறு அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இரண்டு பேரும் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.