1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (13:11 IST)

பாஜகவில் சேர்ந்தது தவறுதான்… மற்றொரு திருணாமூல் காங்கிரஸ் எம் எல் ஏ வருத்தம்!

திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் நிற்க சீட் கிடைக்காது என்பதால் பாஜகவுக்கு தாவியது தவறான முடிவு என திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திபெண்டு பிஸ்வாஸ் எனும் அந்த முன்னாள் எம் எல் ஏ மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அப்போதிருந்த மனச்சோர்வு மிக்க காலத்தில் தவறான முடிவெடுத்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என கடிதம் ஒன்றை சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.