1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (15:07 IST)

’மாடியில் இருந்து கொட்டிய பண மழை’... அலைமோதிய கூட்டம் ! வைரல் வீடியோ

கொல்கத்தா நகரத் தெருவில், நேற்று, ஒரு அலுவலக மாடியில் இருந்து திடீரென பணம் கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்த நகரில் உள்ள பென்டிங் வீதியில் உள்ளது பிரபல அலுவலக வளாகம், இந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் இருந்து நேற்று,ரூ. 2000, ரூ,500, ரூ,100 ஆகிய பணத்தாள்கள் கீழே விழுந்துகொண்டிருந்தது.
 
அதைப்பார்த்த மக்கள்  அதிர்ச்சி அடைந்தாலும் அப்பணத்தை எடுத்துச் செல்லவதில் ஆர்வம் காட்டினர்.அப்போது கூட்டமும் அலைமோதியது.
 
அதாவது, இந்தக் கட்டிய வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனையில் ஈடுபட்டது.அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணக்கட்டுகள் தூக்கி வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.