வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 ஜூன் 2018 (12:41 IST)

ஏம்பா பாத்ரூமையும் விட்டுவைக்க மாட்டீங்களா? தொடரும் யோகியின் அட்ராசிட்டிஸ்

உத்திரபிரதேசத்தில் கழிவறையிலும் காவி நிறம் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பாஜகவை சேர்ந்த இவர் பதவியேற்றத்திலிருந்தே உத்திரபிரதேசத்தில் காவி நிறம் மேலோங்கி காணப்படுகிறது.
 
அரசு அலுவலங்கள், பள்ளிகள் என பல கட்டிடங்களுக்கு பாஜக பக்தாள்கள் பலர் காவி நிறத்தை பூசி அட்ராசிட்டி செய்து வருகின்றனர். இது அவர்களாக செய்கிறார்களா> அல்லது மேலிடத்தின் உத்தரவா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
 
கொடூரத்தின் உச்சமாய் கடந்த மாதம் பாஜகவை சேர்ந்த சிலர் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறத்தை பூசினர். இச்சம்பவம் நாடுமுழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சிலைக்கு மீண்டும் நீல நிறம் பூசப்பட்டது. 
இந்நிலையில் சமீபத்தில் அரசு நிகழ்ச்சிக்கு முதல்வர் யோகி ஆதித்யனாத் தலைமை தாங்கினார். யோகியின் வருகையையொட்டி விழா மேடை, தோரணங்கள் எல்லாம் காவி நிறத்தில் காணப்பட்டது. கழிவறையில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.