1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (15:17 IST)

தொடர்ந்து பெண்களை கொன்று வந்த சீரியல் கில்லர்…

மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வரும் கம்ருஸ்மான் (38) என்பவர் இதுவரை 9 பெண்களை கொலை செய்துள்ளார். அவரிகளில் இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்திற்காக வர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான், ஹூக்ளி ஆகிய இரு மாவட்டங்களில் சுமார் 15 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில்  வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொலை செய்து வந்துள்ளார். சரியாக திட்டம் திட்டி இந்தக் கொலைகளை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்தக் கொலை தொடர்பான வழக்குகள்  கிழக்கு பர்த்வான் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், குற்றவாளி கம்ருஸ்மானுக்கு நீதிபதி  மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.