வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (15:16 IST)

1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்ட நபர்

கேரளாவில் நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொண்ட நபர் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு ரூ.5001 பரிசு பெற்று அசத்தியுள்ளார்.


 

 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. உள்ளூர் கிளப் ஒன்றில் சோறு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதாவது 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும்.
 
இந்த போட்டியில் பலரும் கலந்துக்கொண்டனர். நசீர் என்பவர் 30 நிமிடங்களில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிசாக ரூ.5001 வழங்கப்பட்டது.