வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:44 IST)

நான் மோடியை எச்சரித்தேன்: ரகுராம் ராஜன் அதிரடி!!

பணமதிப்பிழப்பு நடிவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இவை அனைத்தும் மோடி அரசின் சுய முடிவு எனவும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 
 
இதன்பின்னர் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. பணப்புழக்கம் சீராக பல மாதங்கள் ஆனது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரிசர்வ் வங்கியிடம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. 
 
இந்த நடவடிக்கை மீதான குறிப்பு ஒன்றை தயாரித்து அளிக்க சொன்னார்கள். பணமதிப்பழிப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்காது. இது குறித்து ரிசர்வ் வங்கி மோடியை எச்சரித்தது. ஆனால், இவை அனைத்தையும் மீறி இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.