1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (06:40 IST)

முதலில் உங்கள் மாநிலத்தை கவனியுங்கள்: உபி முதல்வருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் பெங்களூரில் நடந்த பாஜகவின் யாத்திரை ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், உபி முதல்வருக்கு தனது டுவிட்டரில் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், “சுவர்களின் நிறத்தை மாற்றுவதே வளர்ச்சியா?. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காததால் தக்காளியை உங்கள் வீட்டின் முன் கொட்டுகிறார்கள். அதை முதலில் கவனியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

சமீபத்தில் கர்நாடகத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பிரகாஷ்ராஜ் பிரதமரை நோக்கி எழுப்பிய காரசாரமான கேள்வியால் அவருக்கும், பாஜகவினர்களுக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.