வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 செப்டம்பர் 2018 (07:09 IST)

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: ரூ.100ஐ நோக்கி செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் இந்த விலையேற்றம் இருப்பதாக கூறப்பட்டாலும், விலை மதிப்பு உயர்ந்தால் மீண்டும் இந்த அளவுக்கு பெட்ரோல் ,டீசல் விலை இறங்காது என்பதே அனைவரின் கவலையாக உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் இன்றைய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒருசில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.