வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam

ஆதார் அட்டையுடன் ஆவணங்கள் இணைப்பு: விதிவிலக்கு பெற்ற என்.ஆர்.ஐக்கள்

இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு, மொபைல் போன், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்பட பல ஆவணங்களை இணைக்க மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.


 


இந்த நிலையில் என்.ஆர்.ஐ, ஓசிஐ மற்றும் பி.ஐ.ஒ ஆகியோர்கள் ஆதார் அட்டையுடன் எந்த ஆவணங்களையும் இணைக்க அவசியம் இல்லை என்று மத்திய அரசின் UIDAI அறிவித்துள்ளது. பல என்.ஆர்.ஐக்களுக்கு ஆதார் அட்டை பெறவே தகுதி பெறவில்லை என்பதால் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

UIDAI-இன் இந்த அறிவிப்பால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், என்.ஆர்.ஐக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.